Posts

Showing posts from April, 2017

மதுரை மீனாஷி அம்மன் கோவில் கதை

மதுரை மீனாஷி அம்மன் கோவில் கதை பல ஆண்டுகள் முன்னால் மாலிக்கபூர் மதுரையை நோக்கிப் படையெடுத்தான்.வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல். நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கோவில்களை இடித்தான். முடியாதவற்றில் மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றிவிடுவார்கள் நம் மக்கள். இப்படியாக துவங்கியதுதான் கல்திரை. கர்பக்ருஹதிர்க்கு முன்னால் ஒரு சுவரை எழுப்பி அதற்கு முன் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிடுவார்கள். ஆக்கிரமிப்பாளன் வருவான். இதுதான் மூர்த்தி என்று நினைத்து இடிப்பான். இதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு மிலேச்சன் கை வைக்க விடக்கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும்வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள். சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன், மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்ற

ஜல்லிக்கட்டு காதல் கதையும்

Image
*ஜல்லிக்கட்டு வரலாற்றில் 400 ஆண்டுகள் பழமையான ஒரு உண்மையான காதல் கதையும் உண்டு*. அதில் நிகழ்ந்த துரோகமும், அக்கதையின் நாயகி உடன்கட்டை மரணமும் நம்மை உலுக்குகின்ற ஒன்றாகும். மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன்பட்டியைச் (இன்றைக்கு அது சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர் கத்தமாயன். நிலபுலன்களோடு வாழ்கின்ற செல்வந்தர். அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் புஜபல பராக்கிரமுடைய இளைஞன். ஆனால் பொறுப்பில்லாமல் தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி. அழகாத்தேவனுக்கு கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டால் பையன் ஒழுங்காக இருப்பான் என்று பெரியவர்கள் கூறியதைக் கேட்ட கருத்தமாயன் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கினான். நாகமலைக்கு அருகேயுள்ள கீழக்குயில்குடியில் வாழ்ந்து வரும் கருத்தமலையின் மகள் ஒய்யம்மாள் குறித்து அறிந்து, தன் செல்வாக்குக்கு சமமாக இல்லையெனினும் கருத்தமாயன், கருத்தமலையின் வீட்டிற்கு பெண் பார்க்கச் செல்கிறார். கருத்தமலைக்கோ ஏக மகிழ்ச்சி. தனது மகளைப் பெண் பார்க்க கருத்தமாயன் வருவதையறிந்து ஊருக்குள் தடபுடல் செய்கிறார். வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர் கருத்தமாயன், தனது மகன் அழகாத்தேவனுக்கு

கொடிமரத்து சிறு நைனார் பள்ளி

Image
கொடிமரத்து சிறு நைனார் பள்ளி, காயல்பட்டினம், உட்புறதோற்றம்! சிற்பங்கள் கொண்ட தூண்கள் சிமென்டினால் மூடப்பட்டுள்ளன. கர்ப்பகிருகம் மூடப்பட்டு ஆர்ச் வடிவ சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

பரணி நட்சத்திரம் (மேஷ ராசி)

பரணி நட்சத்திரம் (மேஷ ராசி) இது சுக்கிரனின் நட்சத்திரம்.இந்த நட்சத்திரத்திற்கு, 1. அஸ்விணி 2. கார்த்திகை 3. மிருகசீரிஷம் 4. புனர்பூசம் 5. ஆயில்யம் 6. மகம் 7. உத்திரம் 8. சுவாதி 9. கேட்டை 10. மூலம் 11. உத்திராடம் 12. திருவோணம் 13. சதயம் 14. ரேவதி ஆகிய 14 நட்சத்திரங்களும் சிறப்பாகப் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும். இதில் உத்திரம் 2 ,3 & 4ஆம் பாதங்கள் கன்னி ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் மேஷத்திற்கு ஆறாம் இடம் கன்னி வீடு. கன்னிக்கு எட்டாம் வீடு மேஷ வீடு. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது. அதே நிலைப்பாடு கேட்டை நட்சத்திற்கும் உண்டு. அது விருச்சிக ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு விருச்சிகம் எட்டாம் வீடு. விருச்சிகத்திற்கு  மேஷம் ஆறாம் வீடு. (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது. அதே நிலைப்பாடு ரேவதி நட்சத்திற்கும் உண்டு. அது மீன ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு மீனம் பன்னிரெண்டாம் வீடு. மீனத்திற்கு மேஷம்  இரண்டாம் வீடு. (12/1 position

Hair Oil – Traditional way

Image
Hair Oil – Traditional way Here are some traditional methods of preparing hair oil at home using the tamil herbs that are found commonly.In this modern age, these herbs may not be seen in and around us, but atleast can be bought from the Country Drug Shops (Naatu marunthu kadai). In these shops, either the ingredients can be bought raw or in powdered form. Hair care is one of the most important for all and especially for the ladies. Indians prefer black long hair. Here are some of the hair oil recipes that can be prepared at home with the given ingredients. Being herbal in all way, these hair oil can be used without any side effects. Hair oil preparation at home to prevent premature greying of hair Ingredients Vellai karisalankanni leaves Coconut oil or sesame oil Hair oil preparation method Collect vellai karisalankanni(white karisalankanni) leaves or you can even use the whole  plant with the stem. Make it into fine paste. This can be done in a mixer. With the p

12 ராசி காரர்கள் வழிபாட்டு முறை

12 ராசி காரர்கள் வழிபாட்டு முறை   மேச        ராசிகாரர்கள் தெய்வபக்தி மிக்கவர்கள், முன்னோர்கள் (குரு சொல்லிக் கொடுத்த) வழிபாட்டு முறையை பின்பற்றுவார்கள். சுவாமி சிலாவிக்ரகத்தின் அழகை தீப ஆராத்தியில் பார்த்து மகிழுவார்கள். தன்னம்பிக்கையாளர். கடவுளின் அன்புக்கு பாத்திரமானவர்கள். இறை வழிபாட்டின் மூலம் ஒழுக்க நெறியை பேணுவார்கள். தீபம் ஏற்றி இறைவனை ஜோதி ரூபமாக வழிபட விரும்புவார்கள். ரிசப              ராசிகாரர்கள் கடவுளிடம் நிறையா வேண்டுதல் வைப்பவர்கள். எனக்கு இது செய்தால் உனக்கு இது செய்கிறேன் என டீல் பேசுபவர்கள். தொழில் முன்னேற்றத்துக்காக இறைவழிபாடு செய்வார்கள். சிலர் செய்யும் தொழிலே தெய்வம் என இருப்பார்கள். தன் பெயருக்கு, தொழில் பெயருக்கு அர்சனை செய்வார்கள். பிரசாத பிரியர்கள். அன்னதானம் வழங்கி மகிழ்வார்கள். இறைவனை கட்டண தரிசனத்தில் விரைவாக பார்ப்பவர்கள். மிதுனம்                      ராசிகாரர்கள் தனது ஒவ்வொரு செயலும் இறைவனால் தான் நடந்தது என மனதார நம்புவார்கள். கோவிலில் பக்தர்கள் போடும் சரண கோசம் மற்றும் மந்திரத்தை கேட்டு மகிழ்ந்தவாறே இறைவழிபாடு செய்பவர்கள். இறைவ

தலைமுடி நன்றாக வளர‌ / பொடுகு குறைய தலைமுடி நன்றாக வளர‌

Image
தலைமுடி நன்றாக வளர‌ / பொடுகு குறைய தலைமுடி நன்றாக வளர‌ தேவையான பொருள்கள்: விளாம் பழத்தின் ஓடு . சீகைக்காய் தூள் . வெந்தயத்தூள் . செய்முறை: விளாம் பழத்தின் வெளியிலிருக்கும் ஓட்டை எடுத்து காய வைத்து இடித்து தூள் செய்து 100 கிராம் அளவு எடுத்து இதனுடன் சீகைக்காய் தூள்  மற்றும் வெந்தயத்தூள் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் வறண்ட கூந்தல் மென்மையாக மாறி பளபளக்கும். தேவையான பொருள்கள்: கேரட் சாறு . எலுமிச்சை பழச்சாறு . தேங்காய் எண்ணெய் . செய்முறை: கேரட் சாறு மற்றும் எலுமிச்சை பழச்சாறு இரண்டையும் தேங்காய் எண்ணெயில் கலந்து  நன்றாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும். தேவையான பொருள்கள்: ஆலிவ் எண்ணெய். ரோஸ்மேரி எண்ணெய். எலுமிச்சைச்சாறு . முட்டை மஞ்சள் கரு . செய்முறை: 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி எண்ணெய்களை எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு, ஒரு முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து ஒன்றாக கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும். தேவையான பொருள்கள்: ம

பைரவர் மந்திரம் & பைரவர் யந்திரம்

Image
பைரவர் மந்திரம் & பைரவர் யந்திரம் ஸ்ரீ பைரவர்  3000  ஆண்டுகளாக இந்துக்களாலும் ,  கிறிஸ்துவர்களாலும் ,  புத்தமதத்தினராலும்  ,  சைவம் மற்றும் வைணவ மார்க்கத்தினராலும் பல்வேறு பெயர்களில் இன்று   வரை வழிபடப்பட்டு வருகின்றனர் .   ஸ்ரீபைரவர் சிவனின் அம்சங்களில் ஒருவர் . சிவனின் அம்சம் என்பதும் மூர்த்தம் என்பதும் ஒன்று தான் .   அவதாரம் என்பது இறைவன் மனிதனாகப் பிறந்து வளர்ந்து நல்லது செய்வதாகும் . அது சமயம் அக்கடவுளின் இடம் காலியாக இருக்கும் . மூர்த்தம் என்பது அப்படி அல்ல. எங்கும் அந்த இறைவன் இருப்பவர். தமிழ் நாட்டில் ஸ்ரீபைரவர்    என்றும் ,  கடவுளை பைரவர் எனவும் அழைக்கின்றனர் . இவரே   கிராமக் காவல் தெய்வமாக நின்று தந்திர சாத்திரப்படி பலி ஏற்கின்றார். கோயில்களில்   முதலில் தொடங்கும் கால பூஜையும் இறுதியாக நடக்கும் இரவு பூசையும் இவருக்கு   உகந்தவை. ஏழரைச் சனி ,  அட்டம சனி ,  அர்த்தாஷ்டம சனி பிடித்துள்ளவர்கள் ஸ்ரீபைரவரை வழிபாடு செய்வதின் மூலம் மட்டும் விடுபடுவர் . ஒரு மனிதனுக்குள் சூட்சுமமாக இருந்து அவனுக்கு   தைரியத்தை கொடுக்கும் காவல் தெய்வம் ஸ்ரீபைரவரே. இத்தகைய சிறப்பு வாய்ந

நலம் தரும் முத்திரைகள்!

Image
நலம் தரும் முத்திரைகள்!        தன்வந்திரி அருளிய “தன்வந்திரி 1000” என்கிற நூலில் விவரிக்கப் பட்டிருக்கும் முத்திரைகளின் முதல் வகையான யோக முத்திரைகள் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அதன் மற்ற வகையான தேக முத்திரைகளைப் பற்றி இனி வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன். இந்த முத்திரைகளைப் பற்றி தனது நூலின் 679 முதல் 713 வரையிலான பாடல்களில் விவரித்திருக்கிறார். முத்திரைகளை செயல்படுத்துவதில் விரல்களே பிரதானம் என்பதை முன்னரே பார்த்திருக்கிறோம்.கட்டை விரலானது நெருப்பையும், சுட்டு விரலானது காற்றையும், நடுவிரவிரலானது ஆகாயத்தையும், மோதிர விரலானது நிலத்தையும், சுண்டு விரலானது நீரையும் குறிக்கிறது. நமது உடல் இயங்கத் தேவையான உயிர்சக்தியை நமது உடலிலுள்ள சக்கரங்களே உற்பத்தி செய்து தருகின்றன. எனவே இவற்றை சக்தி மையங்கள் என்று அழைக்கிறோம். இது மாதிரி மனித உடலில் சக்தி மையங்கள் 20000 க்கு மேல் இருப்பதாகவும், அவற்றில் முக்கியமானவை ஏழு என்றும் மற்றவை துணைச்சக்கரங்கள் என்று தன்வந்திரி கூறுகிறார். மூலாதாரம், சுவாதிச்டானம், மணிபூரகம், விசுத்தி, அனாகதம், ஆக்ஞை, சகஸ்ராரம் ஆகியன முதன்மை